கேள்வி 22: ஏன் என்னை வழிபடு என்று இறைவன் கேட்கிறான்? அது அவனுக்கு அவசியமா?

ஏன் என்னை மட்டும் வழிபடு என்று இறைவன் கேட்கிறான் ? அது அவனுக்கு அவசியமா?

 
 ன்பிற்கு உதாரணமாக அன்னையைதான் எல்லோரும் உதாரணம் கூறுவர். அனேக தவறுகளை நாம் செய்தாலும் நம் அன்னை சிறு  புன்னகையோடு மன்னித்து விடுவாள். இறைவன் எழுபது தாய் உள்ளம் கொண்டவன் என்று அல்லாஹ் கூறுவதாக இஸ்லாம் கூறுகிறது, அப்படி என்றால் இறைவன் எவ்வளவு மன்னிக்க கூடியவன் என்று நமக்கு விளங்குகிறது. பிறந்தது முதல் இறப்பது வரை எவ்வளவோ பாவங்களை ஒவ்வொருவரும் செய்கின்றனர். என்றாலும் பாவம் செய்த அனைவரும் நரகத்திற்கு செல்வர் என்று அடித்து கூற முடியாது. ஏனென்றால் இறைவன் மன்னித்தால் அத்தனை நம் மோசமான செயல்களுக்கும் விமோசனம் கிடைத்துவிடுகிறது. 
 
இது எல்லாம் ஓகே தான் ஆனால் அவன் தன்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறும்போதுதான் கொஞ்சம் இடிக்கிறது. நாம் முடியாது என்று மறுத்தால் 70 தாய் உள்ளம் கொண்ட அல்லாஹ் சரி என்று விட்டு விட்டு போகாமல் தண்டிப்பேன் .என்று சொல்வதோடு நிற்காமல் நிரந்தரமாக் நரகத்தில் போட்டுவிடுவேன் என்று கூறும் போது, என்னது நிரந்தர நரகமா? ஏன் இறைவன் இதற்கு எல்லாம் கோபப்படுகிறான் என்று அநேகருக்கு ஆச்சரியம் வருகிறது.
 
இறைவன் தேவையற்றவன் என்று குரான் குறிப்பிடுவதை அனைவரும் அறிவர். அப்படியிருக்க என்னை மட்டுமே நீ வழி பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவை எங்கனம்? என குழப்பமாக உள்ளது என சிலர் கேள்விகளை முன் வைக்கின்றனர். நியாயமான கேள்வி போலவே தெரிகிறது என்றாலும் இதை கொஞ்சம் ஆழமாக அலசுவோம். பதிலை பார்பதற்கு முன் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
 
உதாரணத்திற்கு நமது அன்னையை எடுத்துக் கொள்வோம். அன்னை நாம் மீது பாசமானவர்தான் என்றாலும் நாம் என்ன செய்தாலும் மன்னித்து விடுவாறா? என்று கேட்டால் இல்லை என்பதே அனைவரது பதிலாக இருக்கும். எப்படி? என்ன தான் பெற்ற தாயாக இருந்தாலும் எல்லா விஷயங்களையும் நாம் மனம் திறந்து பேசிவிடமுடியாது. என்பதை விளக்க ஒரு உதாரணம் கொடுக்கப்படுகிறது.

ஒரு மகனுக்கு தன்னுடைய பிறப்பில் வரக் கூடாத சந்தேகம் வந்து விட்டது என வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் தாயிடம்,சென்று நேரடியாகவே ,"என்னுடைய தந்தை உங்கள் கணவர் இல்லை என் தந்தை வேறு ஒருவர் என நினைக்கிறேன் " என்று கூறுகிறான். எல்லாவற்றையும் மண்ணித்து அரவணைக்க கூடிய அன்னை இப்போது என்ன செய்வார்? நடப்பது வேறாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.  

கேள்வி#5 : முஸ்லீம்களுக்கு மட்டும்தான் சுவர்க்கம் என்றால் இறைவன் ஏன் மற்றவர்களை படைக்க வேண்டும்.. எல்லோரையும் முஸ்லிம்களாகவே படைத்திருக்கலாமே?


இறைவன் மாயையும் அல்ல, தத்துவமும் அல்ல, மற்றும் சூத்திரமும் அல்ல இப்படி சொல்வது எல்லாம் மனிதனின் கண்டுபிடிப்புகள்.

ஒவ்வொரு முறையும், சொந்த மக்களுடைய தூதர் மறைவிற்கு பிறகு,


எப்போது மக்கள் (மீண்டும்) வழி தவறுகிரார்களோ அவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை செய்ய மீண்டும் மீண்டும் இறைவன் வரிசையாக தூதுவர்களை அனுப்பிக் கொண்டே இருந்தான் மக்கள் இறைவனை நேர்வழி காட்டாது போனான் என்று நீங்கள் அவனை குற்றம் பிடிக்காத்திருக்க.



மக்களில் ஏற்றுக் கொள்பவர் ஏற்றனர்-நிராகரிப்போர் நிராகரித்தனர்-நிராகரிகின்றனர் இன்றும்.


நிராகரிப்போர் தங்கள் மனோ இச்சைபடியும் முன்னோர்களின் மார்க்கத்தில் பெருமை கொண்டும் அதிலேயே மூழ்கி கிடந்தனர்/ கிடக்கின்றனர். அவர்களை சிலர் கடவுளாகவும் ஆக்கிகொண்டனர் அல்லது அவரை பற்றி அவதூறு உருவாகுகின்றனர், மற்றவர்களை வழி கெடுப்பதற்காக..  அதனால்தான் இறைவன் குரானில் கேட்கிறான், “அறிவுள்ளவரும் அறிவற்றவரும் சமமாவார்களா?

மேலும் குரானில் அவன் அதற்கு முன் அனுப்பிய தூதுவர்களை உண்மை படுத்தியும் வேதங்களை உண்மை படுத்தியும் வசனங்கள் இறக்கினான்.. மேலும் துதர்களுக்க் இடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தும் இருக்கிறான்..சுமார் 25 தூதர்களின் பெயரையும் (மட்டும் குறிப்பிட்டு) இதுவரை உலகமனைதுக்கும் கொடுக்கப்பட்ட 4 வேதங்கள் எவை என்று கூறி அதை மெயபடுதி இருக்கிறான்.. ஆக உலகம் முழுமைக்கும் அவன் வழிகாட்டிக் கொண்டே இருந்திரிகிறான்..

உங்களை போன்றவர்களே பிந்தைய வேதங்களையும் பிந்தைய தூதர்களும் நிராகரித்து பல்வேறு மாற்றமடைந்த கற்பனை கதைகளால் நிரம்பிய  வேதத்தையும், தூதர்களையே கடவுளாக, அவன் அவ்தாரமாக இறைவன் தூதர்களை மாற்றிவிட்டு.. சிந்திக்கவும் மனமில்லாமல்.. முன்னோர்களின்  பாதையிலேயே விழுந்து கிடக்கிறீர்..

இந்திய பிரதேச மக்கள் இறைவனை சிவன் என்றும், இமய மலையில் அமர்ந்து தவம் செய்பவனாகவும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு இறைவனை உருவகப் படுதிள்ளனர். இல்லாத இறைவனுக்கு பல்வேறு வர்ணங்களையும் சதூர்த்திகளையும் வழிபாடுகளையும் செய்கின்றனர்... ஓரே இறைவனைத்தான் வழிபடுகின்றோம் என்றும் அவனே மனிதனாக பல அவதாரமாக வந்ததாக அழகாக பேசுகின்றனர், ஆனால் பல தெய்வ வழிபாட்டையே பல கதைகள் சொல்லி மேற்கொள்கின்றனர்.


ஆனால் இவர்களில் 99 சதவீதம் பெயரை கேட்டால்என்ன சொல்லுவார்கள் என்றால், “ எல்லாமே கடவுள்கள்தான் என்பார்கள், அதில் சொல்லப் பட்ட கதைகளை பிள்ளை குட்டிகள் உண்மை என்றும் என்பார்கள், சடங்குகள் என்று பூசாரிகள் அல்லது பெரியவர்கள் எதை சொல்கிறாரோ அதையே அப்படியே என்பார்கள், பிறகு அவைகளுக்கு இதிலேயே இதற்கு சக்தி இல்லை அந்த கோவிலுக்கு போ அது நடக்கும் பலிக்கும் என்பார்கள். ஒன்றை விட அடுத்த்தது மிகைத்து என்று சொல்வது எப்படி ஒரு கடவுள் வழிபாடு ஆகும்?


கேள்வி#21: இறைவன் உருவமற்றவன் என்கிறீர்களே, இஸ்லாம் என்ன சொல்கிறது?



இறைவன் தன்னை குறித்துதன் பண்புகளை குறித்து என்ன சொல்லி உள்ளானோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்அதற்க்கு மேல்  சிந்திக்க கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.



உருவமற்ற இறைவன் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் தான் உருவமற்றவன் என்று அவன் குரானில் கூறவில்லை, இறைத்தூதரும் கூறவில்லை.

(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே- மிக்க வல்லமையும்கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (55:26-27)


கேள்வி#6 : நபிகள் நாயகம்(ஸல்) ஒரு சிறுமியை மணம் முடித்தாரா?



நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஏழு வயது சிறுமியை கல்யாணம் செய்யவில்லையா? இதுCHILD ABUSING இல்லையா? நபிகள் என்று சொல்பவரின் இந்த செயல் ஏற்புடையது அன்று என்றும் பயங்கரமான விமர்சனங்கள் இன்றும் முஸ்லிம் அல்லாதோர் கூறுவதை கேட்கிறோம். இஸ்லாத்தை பற்றி அவதூறு செய்ய கிடைத்த அல்வாதுண்டு விஷயமாக ஆகிவிட்டதை நாம் காணுகிறோம்.

கேள்வி#3: நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய தவறான தகவல் கிடைக்கும் போது எவ்வாறு அணுகுவது?


இந்த உலகத்திலேயே மிகவும் தலைசிறந்தவர் யார்? தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார்? என்று Michael H Hart என்பவர் “THE 100 என்கிற புத்தகத்தில்(1978) தலைசிறந்த நூறு பேரை வரிசை படுத்தினார். 


உலக மாந்தர்களின் அணைத்து வரலாறுகளையும் முழுக்க படித்து மற்றவர்களின் வாழ்க்கை வராற்றுடுன் ஒப்பிட்டு செய்து நூறு பேரை தேர்வு செய்து ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த டாப் 100 இடம் கிடைப்பதே என்பது அரிது உதாரணத்திற்கு நமது தேசப் பிதா வெள்ளையர்களை எதிர்த்து ஒரு மாபெரும் வெற்றி அடைந்த அவரே அதில் இல்லை. உனக்கு தெரியுமா முதல் இடம் யாருக்கு என்று? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.


கேள்வி#2 :இஸ்லாம் மாற்று மதத்தை ஏன் தவறு பற்றி சொல்கிறது?


1. இறைவன் தடுத்த உருவ வழிபாடு மற்றும் பல தெய்வ வழிபாடு கொண்டிருத்தல்,

2.  (அல்லது) உருவ வழிபாடு மற்றும் பல தெய்வ வழிபாடு இல்லை என்று  சொல்லிக் கொண்டும்  ஆனால் அதிலேயே மூழ்கி இருத்தல்,

3. இறைவன் மீதும் அவன் கொடுத்த  வேதங்களிலும் உங்களுக்க் சவுகாரியமாக இடை சொருகல் செய்து விட்டு அதிலேயே மூழ்கி இருத்தல்,

அல்லாஹ் அரபுநாட்டு புதுக் கடவுள்தானே ?


கேள்வி: கடவுள் ஒன்றுதான், அதில் உடன்படுகிறோம் ஆனால் நீங்கள் சொல்லும் அல்லாஹ்தான் அந்த ஒரு கடவுள் என்று சொல்வது எப்படி?


இஸ்லாம் நபிகள்(ஸல்) 1400 ஆண்டுகளுக்கு முன் உருவாகியது புதிய மதமமும் இல்லை, நபிகள் நாயகமும் அதன் நிறுவனர் இல்லை. இறைவனை நாம் தமிழில் கடவுள், தேவன் என்று சொல்வது போல உலகத்தை எந்த ஒரு இறைவன் படைத்தது இருக்க முடியுமோ அவனை அரபு மொழியில் அல்லாஹ் என்று அன்றைய காலத்தில் அழைத்தனர். 


முஸ்லிம்களின் வேதம் இவ்வாறு கூறுகிறது: (யுத, கிருஸ்தவ மத தூதர்களுக்கு முன் வந்த,) ஆப்ரஹாம் (இப்ராஹீம்) நபி கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று. (குரான் 2:258)


எனவேதான் அல்லாஹ் என்கிற ஒருவன் முஸ்லிம்களின் கடவுள் என்று யாராகிலும் நினைப்பார் என்றால் அது அவர்களின் அறியாமை என்பது முஸ்லிம்களின் கூற்று. அரபு மக்கள் பயன்படுத்தும் பைபிளில் இறைவனை அல்லாஹ் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் மலேசியாவில் முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் இறைவனை குறிக்க "அல்லாஹ்" என்கிற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று சட்டம் இயற்றியது. இதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன? குரான் கடவுளை பற்றி இவ்வாறு சொல்கிறது:

1.கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,
2.அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!
3.அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
4.மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர். (அத்தியாயம் 112:1-4)

இந்த அத்தியாயத்தில் குரான் சுட்டிக் காட்டும் இறைவனுக்கு சில பண்புகள் உள்ளன. பிறப்பு, இறப்பு கிடையாது, அவனுக்கு நிகராக எதுவும் இல்லை. என்பது போன்றவை. ஆனால் மற்றவர்கள் கூறும் இறைவனுக்கு குடும்பமும் ,பிறப்பும், இருக்கின்றன, இன்னதுதான் உருவம் என்று இறைவனுக்கு நிகராக ஒரு உருவத்தை காட்ட முடியும்.




உதாரணத்திற்கு எதை ஒன்றையும் ஆரம்பிக்கும் முன்  கணபதி ஹோமத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆரம்பிப்பர். அந்த கணபதி என்றவுடன் ஒரு யானை முக தலையும், மனித உடளும் உடைய கலப்பு உருவம் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த கணபதிக்கு பிறப்பு உண்டு, இறப்பும் இருந்தது. பெற்றோர்கள் இருகிறார்கள். இவை அனைத்தும் குரான் கூறும் கடவுள் இலக்கனதிற்கு முரணாக உள்ளது என்பது போன்றவை அல்லாஹ்வின் இடத்தில் கணபதியை வைப்பதில் முஸ்லிம்களுக்கு  சிரமம் இருக்கிறது.  சரி நீங்கள் வைகாட்டி என்ன நாங்கள் கணபதியை அல்லாஹ் என்று அழைக்கிறோம் என்று கூறுபவரும் இருகின்றனர்.

முஸ்லிம் அல்லாதவர்கள் கூறும் இறைவனும் முஸ்லிம்கள் கூறும் இறைவனும் ஒன்று போல இல்லை, அதனால் தேவை இல்லாத பெயர் குழப்பம் வேண்டாம் என்பதற்க்காகத்தான் மலேசியா இந்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. நபிகள் நாயகத்தின் தந்தை பெயர் கூட அப்துல்லாஹ். அதாவது அல்லாஹ்வின் அடிமை என்பதுதான அதன் பொருள். எனவே அல்லாஹ் என்பது நபிகள் நாயகமோ, அரபு இனமோ கண்டுபிடித்த புதுக் கடவுள் இல்லை என்பதை விளங்கலாம்.




 Related:

குரான் கூறும் இறைவன் மட்டும்தான் ஏற்புடையதா?