கேள்வி#3: நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய தவறான தகவல் கிடைக்கும் போது எவ்வாறு அணுகுவது?


இந்த உலகத்திலேயே மிகவும் தலைசிறந்தவர் யார்? தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார்? என்று Michael H Hart என்பவர் “THE 100 என்கிற புத்தகத்தில்(1978) தலைசிறந்த நூறு பேரை வரிசை படுத்தினார். 


உலக மாந்தர்களின் அணைத்து வரலாறுகளையும் முழுக்க படித்து மற்றவர்களின் வாழ்க்கை வராற்றுடுன் ஒப்பிட்டு செய்து நூறு பேரை தேர்வு செய்து ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த டாப் 100 இடம் கிடைப்பதே என்பது அரிது உதாரணத்திற்கு நமது தேசப் பிதா வெள்ளையர்களை எதிர்த்து ஒரு மாபெரும் வெற்றி அடைந்த அவரே அதில் இல்லை. உனக்கு தெரியுமா முதல் இடம் யாருக்கு என்று? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.



நபிகள் நாயகத்தை பற்றி பிரபலங்களின் பார்வை:
கிறிஸ்தவரான மைக்கேல் H ஹார்ட் அவரின் மனித கடவுளான Jesus அவர்களுக்கு கொடுத்தோ மூன்றாவது இடம்தான் புத்தருக்கு நான்காம் இடம்தான் மஹா வீரருக்கு நூறாவது இடம். புத்தர் எவ்வளவு பெரிய மகான் சாந்த சொரூபி அவருக்கு நான்காம் இடம் தான்... ஐன்ஸ்டீன் நியுட்டன் எல்லாம் டாப் டெணுக்குள் வந்தாலும் நம்பர் ஒன் நபிகள் நாயகமாம்.
லண்டன் டெய்லி மெயில் என்னும் பத்திரிக்கை மதிப்புரை எழுதும் போது “....எண்ணங்களை மாற்ற தயாராகுங்கள்.. ஹர்டினின் நூல் குறுகிய நோக்கமுடயதன்று...

இவர் ரேங்கிங் கொடுக்கும் போது செல்வாக்கு உடையவர் என்பதை கருத்தில் இல்லமால் யார் இந்த மனித குலத்திற்கு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார் என்கிற அடிப்படையிலேயே அமைந்துஉள்ளது. மைக்கேல் ஹ் ஹார்ட் சொல்கிறார் நபிகள் நாயகத்தை தேர்வு செய்தற்கு காரணம் இரண்டு. முதலாவது இஸ்லாத்தின் இறைமை இல் அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபியே. இரண்டாவது இயேசு நாதரை போலல்லாமல் முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமன்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள்.

பாருங்கள்...எழாம் நூற்றாண்டில் தொடங்கிய இந்த தாக்கம் 14 நூற்றாண்டுகளை தாண்டி இன்றும் தொடர்கிறது.

இன்னும்,
ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகையில்,
“நான் அந்த அற்புத மனிதரின் வாழ்கையை படித்தேன். அவர் மனித இனத்தை அழிவில் இருந்தும் காப்பாற்ற போந்தவ்ர் என்பது என் கருத்து 

டாக்டர் மு.வ.வரதராசனார் கூறுகையில்,
“இரக்கமில்லா அரேபியரை இணையற்ற இதவாததால்  துனைவராக்கிய வாய்மை நபிகளாரின் வெற்றி
என்கிறார்கள்.....

தினமணி (2003) ரம்ஜான் மலரில் சுஜாதா...


எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கீழே… "திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம். 'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.

அறிஞர் அண்ணா கூறுகையில், 
-நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால்,

1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறுதெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்லஎன்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை மகான்என்றுகொண்டாடக்காரணம்.

இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.

இவை தெரியாமல் கண்ணை மறைபதர்க்கு என்ன  காரணம் ?

(1) அவர்கள் கொண்டுள்ள கடவுள் கொள்கை தவறு என்று இஸ்லாம் சொல்வதை புரிய முயற்சி செய்யவில்லை (அல்லது)  செய்ய விரும்பவில்லை (அல்லது) என்னோடது மட்டுமே  சரி மற்றவர்கள் தவறே என்று பெருமை கொள்வதால் வரும் நிராகரிப்பு

(2) சில முஸ்லிம்கள் ஒருவேளை உன்மேல்/மக்கள் வரம்பு மீரியிருக்கலாம், அதனால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக கூட இருக்கலாம்.

(3) இஸ்லாம் மேல் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கட்டுக் கதைகளையும், பொய் புரட்டுகளையும் அப்படியே நம்புவது, உண்மை என்ன என்று ஆராயாமல் அப்படியே நம்புவது (சில அரை குறை இஸ்லாமிய அறிவு உள்ளவரின் சொல்லை அப்படியே நம்புவது.

நபிகளார் எவ்வளவு பொய் புரட்டுக்களை, விஷய திரிப்புகளை தாண்டி வந்திருக்கிறார் தெரியுமா?.. 
ஒரு சதவீதம் கூட குழப்பவாதிகளுக்கு நபிகளாரை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் தெரியாது. எதாவது நூலகத்திற்கு சென்று வரலாற்றை முதலில் வாங்கி படித்துவிட்டு பிறகு அவர்கள்  விமர்சனம் செய்யவும்..

 அதை விட்டு விட்டு நபிகளாருக்கு எதிரான பொய் புரட்டுகளை உண்மை என்று அப்படியே நம்புவர்களை என்னவென்பது?

அதனால்தான் அறிஞர் அண்ணா இவ்வாறு கூறினார்,
"முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக்கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது,
உலகத்தில் நபிகள் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?" 

சிலர் சரி எது தவறு எது என்று ஆராய கூட முடியாத நிலையில், முழுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சிகூட (?) செய்யாமல் காழ்புனறர்சியுடன் அவரை குறை சொல்கிறார்கள்.

எவ்வாறு நபிகள் பற்றிய தகவல்களை அணுகவேண்டும்?

நாயகம் (ஸல்) அவரைப் பற்றி என்னனென்ன அவதூறுகள் புத்தகத்தில் மற்றும் இணையத்தில் கூறப் படிருகிட்றன என்பதை தேடி தேடி பார்த்து ஆஹா நான் நினைத்தை போல இவர் மோசமானவர் என்று சிலர்  சந்தோசப்படுகிறார்கள்.

குரானின் மீது கூறப்படும் பொய்களை நம்பி,
நான் நினைத்தது தவறு இல்லை இஸ்லாம் பொய்யானதே என்று நிம்மதி அடைகிறார்கள்.

இது Perception. ஆனால் Reality என்பது வேறு. 

நடுநிலையுடன் நபி(ஸல்) அவர்களை பற்றிய தவகல்களை திரட்டி ஆராய்ந்தால் உண்மை எது? புரட்டு என்பது உங்களுக்கு புலப்படும்.

-உண்மையில் அவர்களுக்குநபிகளாரை பற்றியும்,
-அவரின் வாழ்க்கை பற்றியும், பண்பு நலன்களையும்,
-சொல் செயலுக்கு இடையே இருந்த ஒற்றுமை பற்றியும்,
-கூடவே இருந்து குழி பரிதவர்ககளையும்,
-சந்தித்த பிரச்சனைகளையும், எதிர்கொண்ட முறைகளையும்,
-அவருக்கு முன் மக்கத்து மக்களுடைய நிலையை பற்றியும், அவருக்கு பிறகு மக்களின் நிலையை பற்றியும்

=> ஒரு சதவீதம் கூட குழம்பிய வாதிகளுக்கு தெரியாது. “படித்தவரும் படிக்காதவரும் சமமாவாரா? உதாரணமாக பல நூற்றாண்டு காலமாக இஸ்லாத்தையும், நபிகளாரையும் பற்றியும் வதந்திகள் பரப்ப எவ்வளவு புத்தகங்கள் எழுதப்பட்டன என்பது தெரியுமா? இப்பொழுது இந்த நூற்றாண்டில், “ஊடகங்கள் யார் கையில் மிக அதிகமாக உள்ளன மேலும் அதை வைத்துக்கொன்ன்டு என்னெண் பரப்பலாம் என்பது தெரியுமா?

(ஒருவேளை முஸ்லீம்களில் எவரேனும் வரம்பு மீறி இருந்தால் அதன் காரணமாக நீர் காழ்புணர்ச்சி கொண்டிருந்தால்.. அந்த வரம்பு மீரியவர்களுக்கு  இறைவனிடம் வேதனை இருக்கிறது. அதற்கு நீர் இஸ்லாத்தை குறை காணக் கூடாது, இறைவன் மிக்க நீதி செலுத்துபவன்.)

இறை கொள்கையை பரப்புவது என்றால் சும்மாவா?
புதிய புதிய கோணத்தில் இருந்து தாக்குதல் வரும் அதை எல்லாம் சமாளித்துக் கொண்டு நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும்.       
நபிகளாரை மட்டுமல்ல அணைத்து தூதர்களையும் இப்படிதான் அநியாயமாக adultry (விபச்சாரம்)  பட்டம் சுமத்தினர்.


உதாரணம்:  

பைபிளுக்கும் ஏசுவுக்கும் நேர்ந்த கதி 
புனித பவுல் அண்ட் கோ பைபிளில் இயேசுக்கு முன்பு வந்த தூதர்கள் adultry செய்ததாக பொய் சொல்லி உள்ளனர்.. அது சரித்திரத்தில் இடம் பெற்று நீங்கா இடம் பெற்றுள்ளது.. அதனால் பலர்  பைபிளில் காமக் கதைகள் என்று கூறி சிரிக்கிறார்கள்.
மேலும் இயேசு அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும்(இன்ஜீல்) சிதைத்து அதில் இடைசொருகள்கள் செய்து, “ஓரே கடவுளை வணங்குங்கள் என்று சொன்ன அவரையே கடவுளாக ஆக்கி...... இப்போது கிருஸ்தவம் என்கிற ஒரு புதிய தத்துவத்தை உண்டாகி விட்டார் புனித பவுல் அண்ட் கோ..பைபிள் மூலம்  ஆக இப்படிதான் இயேசு கொண்டுவந்த மார்க்கத்தை/ வேதத்தை(இன்ஜீல்)  புரட்டி போட்டு... சிதைத்து விட்டனர்.
இப்படிதான் இயேசு அவர்கள் கொண்டு வந்த மார்க்கதை வெற்றிகரமாக அதற்க்கு உள்ளேயே இருந்து சிதைத்து விட்டார்கள்.. நீங்கள் வெறுமனே பைபிளை மட்டும் படிப்பீரானால் முந்தய தூதர்களை பற்றிய இட்டுக் கதைகளை காணலாம்.. ஏசுவை கடவுள் என்று வழிபாடும் மக்களையும் காணலாம், ஏகப்பட்ட பிழைகளையும் காணலாம்.
இது ஒரு சிறந்த உதாரணம் எப்படி ஒரு விஷயம்/தூது, “அறுநூறு நூற்றாண்டுகளுக்குள் பொய் படுத்தப்பட்டது என்று பார்த்தீரா?

நபிகளாருக்கு முன்பும் மற்ற தூதர்களுக்கு ஏற்பட்ட நிலை  அப்படிதான். அப்படி இருக்கையில் கேட்கும் விஷயங்களை எப்படி ஆராய வேண்டும்?
அதனால் தான் இறைவன் நேர்வழி காட்ட புதிய புதிய தூதர்களை வெவேறு சமுதாயத்திற்கு அனுப்பிக்கொண்டே இருந்தான் அவர்களை நல்வழி படுத்த..

நபிகளாருக்கு முன் வந்த அணைத்து இறை தூதர்களையும் அந்த அந்த காலத்தை சேர்ந்த மக்கள் இப்படிதான் இட்டுக் கட்டியும், துன்புறுத்தியும், கொலைகூட செய்தும் வரம்பு மீறலாயினர்.. உங்களில் எத்தனை பேர் உண்மை என்ன என்பதை அறிய முயற்சியாவது செய்வீர்கள்?
“படித்தவரும் படிக்காதவரும் சமமாவாரா? 

- எவ்வளவு பொய் புரட்டுக்களை, விஷய திரிப்புகளை தாண்டி வந்திருக்கிறார் தெரியுமா?..

சிலர்  சரி எது தவறு எது என்று ஆராய கூட முடியாத நிலையில், முழுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சிகூட செய்யாமல் காழ்புனறர்சியுடன் அவரை குறை கூறுகிறார்கள்..

நபிகளாரின் மனைவி நபிகளாரை மறுமணம் செய்ததை கூட அசிங்கமாக எழுதுகிகிறார்கள், இருவருக்கும் பிடித்திருன்தது கல்யாணம் செய்த கொண்டனர், விஷியம் அவ்வளவு தானே. ஏன் இந்த ஒர வஞ்சனை, காழ்புனறர்ச்சி? 

நபிகளாரை பற்றி அசிங்கமாக தவறு செய்ததாக (அதுவும் எழுத கூசும் விஷயங்கள் செய்யப்பட்டது என்று வாதிடுகிகிறார்கள்..). 

அவர்களுக்கு புரிய வில்லையா அதில் எந்த அளவுக்கு Authenticate ஆன விஷயமாக இருக்கும் என்பதைப்பற்றி..?

அதனால்தான் இறைவன் குரானில் கேட்கிறான்,
“அறிவுள்ளவரும் அறிவற்றவரும் சமமாவார்களா?

நபிகளாரை பற்றி அவதூறை கேட்டு நீங்களாகவே எதையாவது முடிவு செய்து கொள்ள வேண்டாம்.  இந்த குழப்பவாதிகளின் பேச்சை கேட்டு இவ்வளவு தெளிவான வேதமும்.. அதன் படி நடந்து காட்ட உங்களிடத்தில் தூதர் வந்தும்.. அதை படிக்க மாட்டேன்.. முழுமையாக தெரிந்து கொண்டு சரியா தவறா என்று கூட ஆராய மாட்டேன் என்னும் போது மறுமையில் வருத்தப் படபோவது வேதனை தரும் விஷயம். 

சொல்வது மட்டும் தான் எங்கள் வேலை. உண்மைகள் காலப்போக்கில் தெரிய வரும்,  அதனால் உங்கள் மரணத்திற்கு முன் தெரிந்து கொள்ளுங்கள்! இறைவன் நம் மேல் நலருள் பொழிவானாக. ஆமின்.